21 February, 2015

உலகத் தாய் மொழி தினம் - தாய் மொழி என்பது என்ன?



            இன்று (21.02.2015) உலகத் தாய் மொழி தினம். இது பற்றியப் பதிவுகள் ஏதேனும் உள்ளனவா என்று வலை திரட்டிகளில் (தமிழ்மணம், தேன் கூடு) தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. சரி நாமே அது பற்றி ஒரு பதிவு போடுவோம் என்று முடிவிற்கு வந்தேன்.

            தாய் மொழி என்பது என்ன? என்பதில் தொடங்குவோம். ஒரு குழந்தை தனது முதல் வார்த்தையினைத் தாயிடமிருந்தே பெறுகிறது. அதுஅம்மாஎன்பதாகத்தான் இருக்கும். அம்மா என்பது தமிழ் மொழியாக இருந்தாலும் உலகில் பெரும்பாலான மொழிகள் அனைத்திலும் அம்மா என்பதும்எனும் ஓசையின் தொடர்புடனேயே இருக்கிறது. வேறொரு வலைப்பதிவிற்காக அண்டம் பற்றிய செய்திகளைத் தொகுத்தபோது, அண்டம் என்பது ஓசை இல்லாதது என முன்பு கூறியிருந்த அறிவியலாளர்கள், தற்போது, அண்டமானதும்எனும் மெல்லிய ஓசையுடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். எனவே தாயிற்கும் அண்டத்திற்கும் படைப்பில் தொடர்புண்டு எனக் கொள்வோம்.

      ஒரு மனிதன் எத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்தாலும், அவனது சிந்தனை என்பது எப்போதும் அவனது தாய்மொழியில்தான் இருக்கும். அதாவது அவன் எந்த மொழியுடன் வளர்ந்து வருகின்றானோ அந்த மொழியில்தான் அவன் சிந்தனையின் செயல்பாடு இருக்கும். அதாவது, பிறந்த மொழியைக்காட்டிலும் அவன் பேசி வளர்ந்த மொழிதான் அவனுக்குச் சிந்தனை மொழியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு தமிழ் பேசும் தாய்க்குப் பிறந்த குழந்தையின் தாய் மொழி எப்பொழுதும் தமிழாகத்தான் இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஏனெனில், அந்தக் குழந்தை பிறந்த உடனேயே அல்லது அதற்கு புரிந்துகொள்ளும் காலம் வருவதற்குள்ளாகவே, அது வேறொரு மொழி பேசுபவரிடம் வளரத் தொடங்குமானால், அது நிச்சயம் தமிழை மறந்து போவதுடன், தமிழ் தன் தாய்மொழி எனும் உணர்வே இல்லாமல் வாழத் தலைப்படும். அப்போது அதன் சிந்தனை மொழி என்பது அது எங்கு வாழத் தலைப்பட்டதோ அதுவாகத்தான் இருக்கும்.
           
            இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தாயின் மொழியும் சிந்தனை மொழியும் ஒன்றா? பல்வேறு சூழல்களில் அது நிச்சயம் வேறு வேறாக இருக்கலாம். அப்படி எனில் தாய்மொழிக்குச் சிறப்பா அல்லது சிந்தனை மொழிக்குச் சிறப்பா?
           
            தாய்மொழியே சிந்தனை மொழியாக இருக்கும்போது அதற்கு சிறப்பு மிக அதிகம். தாயின் மொழி வேறாக இருந்து ஒருவருக்கு சிந்தனை மொழி வேறாக இருக்குமானால், அந்த சிந்தனை மொழிதான் அவருக்குத் தாய் (வளர்ப்புத்தாய்) மொழி எனலாம். அதனால்தான் தாய்மொழிக் கல்வி வேண்டும் என்கிறோம். [இது பற்றி ஒரு விரிவான பதிவினைப் பின்னர் பதிவிடுகிறேன்].
           
            உலகத் தாய்மொழித் தினத்தில் நம் தாய் மொழியை வணங்குவதோடு, உலகின் அனைத்து தாய் மொழியாளருக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.


No comments:

Post a Comment