கண்ணுறங்கு
மகளே கண்ணுறங்கு
கால
மகள் மடிமீது கண்ணுறங்கு
விண்ணுலகம்
செல்வதற்கு கண்ணுறங்கு
விளையாடும்
அலையோரம் கண்ணுறங்கு
இன்னுமொரு
பெண் இதுபோல் பூமியிலே
இனி
பிறக்கப் போவதில்லை கண்ணுறங்கு
எண்ணமெல்லாம்
தமிழ் மக்கள் என்றவளே
எழிலாகத்
துயில் கொண்டு கண்ணுறங்கு
வற்றியதோர்
காவிரியின் கரையெல்லாம்
வளமாக்க
வந்தவளே கண்ணுறங்கு
கட்டியதோர்
முல்லையணை நீர் கிடைக்க
களம்
புகுந்து வென்றவளே கண்ணுறங்கு
ஆறாது
துயர்கொண்டு அழுகின்ற மக்களெல்லாம்
மாறாதா
காதலினால் மனமுருகி வேண்டுவதைக்
கேளாத
செவிகொண்டு கண்மூடி கிடப்பவளே
மீளாத
துயில் இதுதான் கண்ணுறங்கு கண்ணுறங்கு
பற்றியதோர்
கையின்றி தவிக்கின்ற குழந்தைகள்போல்
திக்கறியா
மக்களுக்கு திசைகாட்ட வேண்டுமிங்கே
பெற்றெடுக்கா
பிள்ளைகளைக் கொண்டவளே பெருமகளே
பிறப்பெடுத்து
மீண்டும் வர கண்ணுறங்கு கண்ணுறங்கு
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு
ReplyDeleteஇன்றுதான் தங்களின் பதில் பதிவினைப் பார்த்தேன்.
மிக்க நன்றி.